நம் முன்னோர்கள், ஞானிகள் பல வித கணிதங்களையும், அதற்கான பலன்களையும் நமக்கு
கொடுத்து சென்று உள்ளனர். நாம் புது புது கணிதங்களை கண்டு பிடிக்க வேண்டிய தேவை
இல்லை, நம் முன்னோர்கள் அருளிச்சென்றதை கடை பிடித்தாலே போதுமானது.
அதேபோல் நமது முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு வாசகத்தையும் நாம் மனதில் கொள்ள
வேண்டும். அதாவது கால, தேச, வர்த்தமானம், ஜாதி, மத, நிற பேதம், சுருதி, யுத்தி,
அனுபவத்துடன் ஜோதிடம் பலன்களை கையாள வேண்டும் என்றும் சொல்லி இருகிறார்கள்.
ஒரு விதி சிலருக்கு பொருந்தும், பலருக்கு பொருந்தாமல் கூட போகலாம். ஜோதிட
விதிகள் பொய் அல்ல, அனால் மனிதன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.
எனவே ஒரு எந்த ஒரு ஜோதிட விதியும் அனைவருக்கும் பொருந்தும் என எடுத்துக் கொள்ளுதல்
கூடாது.
இன்றைய கால கட்டத்தில் மனிதனின் வாழ்வியல் தன்மை பரிணாம வளர்ச்சி அடைத்து
வருகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. இதற்கு தகுந்தாற்போல் நாம் கூறும்
பலன்களிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆண் காலத்தில் ஆண்
குழந்தை பிறக்க வேண்டும், பெண் காலத்தில் பெண் பிறக்க வேண்டும் என்ற நிலை இன்று
இல்லை, ஆண்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நிலை இன்று இல்லை, ஒரு இனத்தார் ஒரே
ஊரில் இருக்க வேண்டும் என்ற நிலையம் இன்று இல்லை, ஒரு வர்ணத்தார் ஒரே தொழிலில்
ஈடுபட வேண்டும் என்ற நிலையம் இல்லை, அரசன் மகன் அரசன் என்ற நிலையம் இன்று இல்லை
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
ஜாதகம் பார்க்க வருகிறவர் என்னுடன் எத்தனை சகோதரன், இந்த ஜாதகர் இருக்கிறாரா
இல்லையா, என்ன படித்து இருப்பார், எங்கள் வீட்டில் மாடு என்ன கண்ணு குட்டி போடும்
என்று நம்மை சோதிப்பவர்களுக்கு பலன்கள் சொல்ல ஆர்வம் காட்டி நமது நேரத்தையும்,
கௌரவத்தினையும் நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம்.
அதேபோல் என்ன என்ன கேள்விகளை ஒரு ஜோதிடரிடத்தில் கேட்கலாம், எந்த எந்த
கேள்விகளுக்கு சரியாக பலன் நிர்ணயம் செய்து சொல்லி விட முடியும் என்றும் நாம் தான்
நமது வாடிக்கையாளர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். “யார் நமது
வாடிக்கையாளர்களை என்பதை நாம் முடிவு செய்வோம்” . “யார் அவர்கள் ஜோதிடர் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்” . என்னதான் எண்ணையை உடம்பில் பூசிக்கொண்டு மண்ணில்
உருண்டாலும் ஓட்டுகிற மண் தான் ஓட்டும்.
எனவே உங்களிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வரும்பொழுது, உங்களால் அவரது நிலையை
யூகம் (தெய்வ அருளால் -Intution Power) செய்ய முடியும் என்றால் மேற்கொண்டு பலன்கள் சுலபமாக சொல்லி
விடலாம். வந்தவரின் நிலையை உங்களால் யூகம் செய்ய முடியாவிட்டால், தங்கள் வந்ததன்
நோக்கம் என்னவென்று கேட்டு விடுவதில் தப்பு ஒன்றும் இல்லை. ஒருவரின் நிலை அறியாமல்
மேற்கொண்டு பலன் சொல்வதில் அர்த்தமில்லை.
ஒரு ஜோதிடர் (ஜோதி – ஒளி) ஒரு நல்ல வழிகாட்டியாக செயல் பட முடியுமே தவிர, தலை
எழுத்தை சரியாக நிர்ணயம் செய்யவோ, அல்லது தலை எழுத்தை மாற்றி அமைக்கவோ நம்மால் முடியாது
என்பதே எனது கருத்து ஆகும்.
நன்றி ! K.S. சுந்தர ராஜன், திருச்சி – செல் : 98949 20196
No comments:
Post a Comment