Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

6 Aug 2014

“இன்றைய ஜோதிடரின் நிலை”



நம் முன்னோர்கள், ஞானிகள் பல வித கணிதங்களையும், அதற்கான பலன்களையும் நமக்கு கொடுத்து சென்று உள்ளனர். நாம் புது புது கணிதங்களை கண்டு பிடிக்க வேண்டிய தேவை இல்லை, நம் முன்னோர்கள் அருளிச்சென்றதை கடை பிடித்தாலே போதுமானது.

அதேபோல் நமது முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு வாசகத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது கால, தேச, வர்த்தமானம், ஜாதி, மத, நிற பேதம், சுருதி, யுத்தி, அனுபவத்துடன் ஜோதிடம் பலன்களை கையாள வேண்டும் என்றும் சொல்லி இருகிறார்கள்.

ஒரு விதி சிலருக்கு பொருந்தும், பலருக்கு பொருந்தாமல் கூட போகலாம். ஜோதிட விதிகள் பொய் அல்ல, அனால் மனிதன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். எனவே ஒரு எந்த ஒரு ஜோதிட விதியும் அனைவருக்கும் பொருந்தும் என எடுத்துக் கொள்ளுதல் கூடாது.

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் வாழ்வியல் தன்மை பரிணாம வளர்ச்சி அடைத்து வருகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. இதற்கு தகுந்தாற்போல் நாம் கூறும் பலன்களிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆண் காலத்தில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும், பெண் காலத்தில் பெண் பிறக்க வேண்டும் என்ற நிலை இன்று இல்லை, ஆண்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நிலை இன்று இல்லை, ஒரு இனத்தார் ஒரே ஊரில் இருக்க வேண்டும் என்ற நிலையம் இன்று இல்லை, ஒரு வர்ணத்தார் ஒரே தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிலையம் இல்லை, அரசன் மகன் அரசன் என்ற நிலையம் இன்று இல்லை இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

ஜாதகம் பார்க்க வருகிறவர் என்னுடன் எத்தனை சகோதரன், இந்த ஜாதகர் இருக்கிறாரா இல்லையா, என்ன படித்து இருப்பார், எங்கள் வீட்டில் மாடு என்ன கண்ணு குட்டி போடும் என்று நம்மை சோதிப்பவர்களுக்கு பலன்கள் சொல்ல ஆர்வம் காட்டி நமது நேரத்தையும், கௌரவத்தினையும் நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம். 

அதேபோல் என்ன என்ன கேள்விகளை ஒரு ஜோதிடரிடத்தில் கேட்கலாம், எந்த எந்த கேள்விகளுக்கு சரியாக பலன் நிர்ணயம் செய்து சொல்லி விட முடியும் என்றும் நாம் தான் நமது வாடிக்கையாளர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். “யார் நமது வாடிக்கையாளர்களை என்பதை நாம் முடிவு செய்வோம் . “யார் அவர்கள் ஜோதிடர் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் . என்னதான் எண்ணையை உடம்பில் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும் ஓட்டுகிற மண் தான் ஓட்டும்.

எனவே உங்களிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வரும்பொழுது, உங்களால் அவரது நிலையை யூகம் (தெய்வ அருளால் -Intution Power) செய்ய முடியும் என்றால் மேற்கொண்டு பலன்கள் சுலபமாக சொல்லி விடலாம். வந்தவரின் நிலையை உங்களால் யூகம் செய்ய முடியாவிட்டால், தங்கள் வந்ததன் நோக்கம் என்னவென்று கேட்டு விடுவதில் தப்பு ஒன்றும் இல்லை. ஒருவரின் நிலை அறியாமல் மேற்கொண்டு பலன் சொல்வதில் அர்த்தமில்லை.

ஒரு ஜோதிடர் (ஜோதி – ஒளி) ஒரு நல்ல வழிகாட்டியாக செயல் பட முடியுமே தவிர, தலை எழுத்தை சரியாக நிர்ணயம் செய்யவோ, அல்லது தலை எழுத்தை மாற்றி அமைக்கவோ நம்மால் முடியாது என்பதே எனது கருத்து ஆகும்.
நன்றி ! K.S. சுந்தர ராஜன், திருச்சி – செல் : 98949 20196

29 Jul 2014

தாம்பத்தியம் ஒரு இயற்க்கை மருந்து ......

தாம்பத்தியம் ஒரு இயற்க்கை மருந்து ......
நமது உடலில் 7 சக்ரங்கள் இயங்குவது அனைவரும் அறிந்ததே! இந்த சக்கிரங்கள் அனைத்தும் ஒரே சீராக இயங்க வேண்டியது அவசியம். அதற்கு ஒரு ஆண் ஆனாலும் சரி ஒரு பெண் ஆனாலும் சரி வயதுக்கு வந்த பின்னர் முறையான தாம்பத்தியத்தில் ஈடு படவேண்டும். இனபெருக்கம் செய்துக்கொள்வது நோக்கமாக இருந்தாலும் கூட, நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் சீராக வேலை செய்ய தாம்பத்தியம் மிகவும் அவசியம். நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு தாம்பத்தியம் ஒரு மாபெரும் மருத்து ஆகும். ஆன்மிகவாதிகளுக்கும், சித்தர்களுக்கும் தாம்பத்தியம் தேவை இல்லை, ஏன் என்றால் அவர்களுக்கு தமது 7 சக்கரங்களை எப்படி சீராக வைத்துக் வேண்டும் என்பது தெரியும், மேலும் அது அவர்களுக்கு கைவந்த கலையும் ஆகும். அவர்களுக்கு உணவு கூட தேவை இல்லை, காரணம் காற்றில் அமிர்தம் உள்ளது, அதன் சுவையினை நன்கு அறிந்தவர்கள் அவர்களே. மனிதனுக்கு திருமண ஆசை இருந்து திருமணம் செய்யவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் அபாயமும் உள்ளது. இன்று மன நல காப்பகத்தில் இருக்கும் 90 சதவீத மனிதர்களுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை என்பதே காரணமாகும். பகல் பொழுது முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உடல் களைப்பு போய்விடுகிறது அல்லவா, அதே போல் தாம்பத்தியம் இல்லாவிட்டாலும் உடல் அசதி ஏற்படும், நமது மன நிலை பாதிக்கும். எனவே தாம்பத்தியம் "விருந்தாக" இல்லாவிட்டாலும் "மருந்தாக" மனிதனுக்கு கண்டிப்பாக தேவை !

தாயாருக்கு ஏன் நான்காம் பாவகத்தை வைத்து உள்ளோம்?



இனிய நண்பர்களே,
நம் தாயாருக்கு ஏன் நான்காம் பாவகத்தை வைத்து உள்ளோம்?
லக்னம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கிழக்கு அடிவானத்தில் உதயம் ஆகும் இராசியே லக்னம் என எடுத்துக்கொள்கிறோம்.
7 ம் பாவம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் மேற்கு அடிவானத்தில் இருக்கும் இராசி ஆகும்.
10 ம் பாவம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் உச்சியில் உள்ள இராசியை குறிக்கும்.
4 ம் பாவம் என்பது பூமியின் மத்திம பகுதியை, அதாவது பாதாளத்தை குறிக்கும். (பூமிக்கு பின் பகுதியில் உள்ள இராசியையும் எடுத்துக் கொள்ளலாம்)
பூமி என்பது சூரியனில் இருந்து வந்த ஒரு தீ பிழம்பே ஆகும். இன்னும் பூமியின் மத்திம பகுதியில் தீ பிழம்பு உள்ளது. இந்த பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கு தேவையான பஞ்ச பூத சக்தி ஒரு அளவுடன் இருக்கிறது. எனவே மனித குலம் தோன்றுவதற்கு பூமியே காரணம். பூமிக்கு இன்னும் ஒரு காரகம் உற்பத்தி செய்தல். இந்த உலகில் உள்ள அணைத்து இயற்கை வளங்களும் பூமியினாலேயே உண்டானது. உற்பத்தி செய்த காரணத்தாலே நாம் பூமியை “பூமித்தாய் மற்றும் “பூமி மாதா என்று அழைக்கிறோம்.
அதேபோல் தகப்பனாரின் உயிர் அணுவினை, தனது கற்ப்பபையில் சுமந்து, தனது இரத்தத்தினால், நமது உடல் உறுப்புக்களை பாரபட்சம் பார்க்காமல் உற்பத்தி செய்து, நம்மை இந்த பூமியில் அவதரிக்க செய்த தாய்க்கும் 4 ம் பாவத்தை அளித்து உள்ளோம்.
எனவே நம் முன்னோர்கள் தாய், நிலம், பூமியில் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் நான்காம் பாவக காரகதுவங்களாக வைத்து உள்ளனர்.  
எனக்கு தெரிந்த அளவில் பதிவு செய்து இருக்கிறேன், தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன். எனது கருத்து சரியாக பட்டால் Share செய்யுங்கள்.
நன்றி ! K.S. சுந்தர ராஜன், திருச்சி, செல்: 98949 20196.

12 Jul 2014

3 SUNDAYS CLASS IN CHENNAI



TALI METHOD – “ Prediction”  Based on Dasa Bhuthi . 3 SUNDAYS CLASS IN CHENNAI
ஒரு ஜாதகத்திற்கு பலன் கூறுவதில் தசா புத்தியின் பங்கு மிக முக்கியமானது. நமது Tali Method - வெறும் 12 விதிகளை மட்டுமே உள் அடக்கியது ஆகும். இந்த விதிகளை கொண்டு எப்படி தசா புத்திக்கு பலன் கூறவேண்டும் என்பதினை, மூன்று ஞாயிற்றுகிழமைகளில், நேரடி வகுப்பு மூலம் கற்று தருகிறோம். விதிகளையும், விதிகளை கொண்டு எப்படி பலன் கூறுவது என்பதினையும், பல உதாரண ஜாதகங்கள் மூலம் தெளிவாக கற்று தருகிறோம். இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள எந்த அடிப்படை ஜோதிட அறிவும் தேவை இல்லை, ஜோதிடம் கற்று கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமானது. ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு நிச்சியமாக நமது வகுப்பு நல்ல அடித்தளமாக அமையும். நமது விதிகளை எப்படி கையாளுவது என்பதினை தெரிந்து கொண்டால் முதலில் உங்கள் ஜாதகதிற்க்கான பலன்களை பலன்களை நீங்களே அறிந்து கொள்ளலாம், பிறகு படிப்படியாக மற்றவர்கள் ஜாதகத்திற்கும் தைரியமாக பலன் சொல்ல முடியும்.
2012 ம் ஆண்டு முதல் இதுவரை நமது TALI முறையினை 215 ஜோதிட ஆர்வலர்கள் படித்து இருகிறார்கள். நமது முறையினை கொண்டு பலன்கள் சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருபதாகவும், துல்லியமாக பலன்கள் சொல்லிக்கொண்டு இருப்பதகாவும் கூறுகின்றனர்.
ஜோதிட சாத்திரத்தில் உள்ள அணைத்து சமாச்சாரங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்றால் நான்கு வாரங்கள் போதாது. அனால் ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்வதிற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் கண்டிப்பாக சொல்லி கொடுக்கப்படும். இங்கு ஜாதக கணிதம் சொல்லி தரப்படுவதில்லை, நமது முறைக்கு தேவையான கணிதங்கள் Astrology Software மூலம் பாவகமும், தசாபுத்தியும் எடுத்துக்கொள்ள முடியும், என்பதால் ஜாதக கணிதம் போன்ற விஷயங்களை நீங்கள் தேவை என்றால் பின்னர் படித்து தங்கள் கணித அறிவினை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நான்கு ஞாயிற்றுக்கிழமையே தொடர்ந்து சில மாணவர்களால் வர முடிவதில்லை, இந்நிலையில் ஜோதிடத்தில் உள்ள அணைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும், அதற்கு எப்படி தொடர்ந்து படிக்க வரமுடியும்? அதனால் காலத்தின் அருமை கருதியே குறைந்த நாட்களில் நமது வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
தற்சமயம் நமது 11 th Batch சென்னையில் (July – 20, 27 & August -3) நடைபெறவுள்ளது. நன்கொடை:ரூபாய் 2000/- மட்டுமே ( 3 ஞாயிறு வகுப்பு ) தேநீர், உணவு தங்கள் செலவுதான். முன்பதிவு அவசியம்! வகுப்பு விபரம்.
முதல் நாள் : TALI METHOD விதிகளை பயன்படுத்தும் விதம்.
இரண்டாம் நாள் : நவீன பாவக காரகங்கள், மற்றும் ஜோதிட லாஜிக்.
மூன்றாம் நாள் : அஷ்டகவர்க்கத்தில் தேவையான விஷயங்கள்,
                 கடிகார பிரசன்னம், உதாரண ஜாதகங்கள்...
நமது வகுப்புகள் கோச்சிங் Methodology படி வேகமாக நடக்கும். சில குறுக்கு கேள்விகள் தவிர்க்கப்படும். அணைத்து சந்தேகங்களுக்கும் வகுப்பு முடியும் நேரம் பதில் கண்டிப்பாக தரப்படும். சென்னையில் வகுப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
நமது TALI முறை படித்தாலும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு பாடம் படிக்க முடியும் என்பதால், அடிக்கடி வகுப்புக்களுக்கு வரச்சொல்லி மாணவர்களிடம் இருந்து பணம் வாங்க விருப்பம் இல்லாத காரணத்தினால். Face Book இல் உதாரண ஜாதகம் ஒவ்வொன்றாக போட்டு மாணவர்களை பலன் சொல்ல Training கொடுத்து வருகிறேன். Face Book இல் சில நண்பர்கள், இம்முறையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அடுத்து எந்த ஊரில் வகுப்புகள் என்று தெரியபடுத்தினால் தாங்களும் கலந்துக்கொள்வதாக கூறியதினால் இதனை FACE BOOK இல் போடுகிறேன்.
           கண்டிப்பாக இது விளம்பரம் அல்ல!
ஜோதிடம் சொல்லித்தருவது எனது உரிமை, எப்படி 4 வாரத்தில் சொல்லி கொடுக்க முடியும் என்ற கவலை யாருக்கும் வேண்டாம். உண்மையில் இந்த முறையினை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறவர்கள் என்னிடம் நேரடியாகவே கேட்கலாம். இது முடிவல்ல! ஆரம்பம் !
அன்புடன் K.S. சுந்தர ராஜன், திருச்சி : 91500 53253 / 98949 20196.

8 Apr 2014

INFORMATION

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
நமது TALI METHOD ன் படி ஜாதக பலன்கள் அலசுவதற்கு Face Book சுலபமாக இருப்பதால், அனைவரும் நமது Face Book  ல்  இணைந்து கொள்ள வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
   Face Book I.D.: TALI METHOD 

31 Mar 2014

வினாடி - 31



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
பஞ்ச மஹா புருஷ யோகம் என்பது குஜாதி ஐவர்களான செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியோர் லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் இவ்யோகம் ஏற்படுகிறது. அதே வேலையில் இயற்கை narkolgalnarkolgal நற்கோள்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரத்திருக்கு அதிபதி அனால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படும். இந்த நிலையை தோஷம் என எடுத்துக் கொள்ளவா அல்லது யோகம் என எடுத்துக்கோள்ளவா?
இந்த பஞ்ச மகா புருஷ யோகம் ஏற்படும் பொழுது கேந்திர ஆதிபத்திய தோஷம் அடிபட்டு போகிறது என்ற விதிவிலக்கும் புத்தங்களில் உள்ளது. அனால் நடைமுறையில் இந்த பஞ்ச மகா புருஷ யோகம் உடைய ஜாதகர் எதோ ஒரு வகையில் பாதிக்க படுகிறார் என்பதை மறுக்க முடியாது. இதில் யோகமும் வேலைசெய்யும் உண்டு தோஷமும் வேலைசெய்யும். இரண்டும் உண்டு.
இந்த சிக்கலை நமது TALI முறை படி அலசி பார்போம். கேந்திரம் என்பது 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களை குறிக்கும். இதில் 1, 7 ம் பாவங்கள் ஒற்றைப்படை ஆகும், 4, 10 ம் பாவங்கள் இரட்டைப்படை ஆகும்.
1, 7 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் அகம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதேவேளையில் புறம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொதுவிதி ஆகும்.
4, 10 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் புறம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதே வேளையில் அகம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொது விதி ஆகும்.
எனவே பஞ்ச மகா புருஷ யோகம் அகம் சார்புடைய காரகங்கள் அல்லது புறம் சார்புடைய காரகங்கள் எதோ ஒன்றை மட்டும் கொடுக்கும் ஒன்றை கெடுக்கும். இதனால்தான் Tali முறையில் பாரம்பரிய முறையில் உள்ள யோகம், தோஷம், ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம், அஸ்தமனம், வக்ரம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில்லை. 
நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.