Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

31 Mar 2014

வினாடி - 31



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
பஞ்ச மஹா புருஷ யோகம் என்பது குஜாதி ஐவர்களான செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியோர் லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் இவ்யோகம் ஏற்படுகிறது. அதே வேலையில் இயற்கை narkolgalnarkolgal நற்கோள்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரத்திருக்கு அதிபதி அனால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படும். இந்த நிலையை தோஷம் என எடுத்துக் கொள்ளவா அல்லது யோகம் என எடுத்துக்கோள்ளவா?
இந்த பஞ்ச மகா புருஷ யோகம் ஏற்படும் பொழுது கேந்திர ஆதிபத்திய தோஷம் அடிபட்டு போகிறது என்ற விதிவிலக்கும் புத்தங்களில் உள்ளது. அனால் நடைமுறையில் இந்த பஞ்ச மகா புருஷ யோகம் உடைய ஜாதகர் எதோ ஒரு வகையில் பாதிக்க படுகிறார் என்பதை மறுக்க முடியாது. இதில் யோகமும் வேலைசெய்யும் உண்டு தோஷமும் வேலைசெய்யும். இரண்டும் உண்டு.
இந்த சிக்கலை நமது TALI முறை படி அலசி பார்போம். கேந்திரம் என்பது 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களை குறிக்கும். இதில் 1, 7 ம் பாவங்கள் ஒற்றைப்படை ஆகும், 4, 10 ம் பாவங்கள் இரட்டைப்படை ஆகும்.
1, 7 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் அகம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதேவேளையில் புறம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொதுவிதி ஆகும்.
4, 10 ம் பாவங்களில் ஒரு கோள் இருப்பின் புறம் சார்புடைய காரகங்கள் வலுபெறும், அதே வேளையில் அகம் சார்புடைய காரகங்கள் வலுவிழக்கும் என்பது பொது விதி ஆகும்.
எனவே பஞ்ச மகா புருஷ யோகம் அகம் சார்புடைய காரகங்கள் அல்லது புறம் சார்புடைய காரகங்கள் எதோ ஒன்றை மட்டும் கொடுக்கும் ஒன்றை கெடுக்கும். இதனால்தான் Tali முறையில் பாரம்பரிய முறையில் உள்ள யோகம், தோஷம், ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம், அஸ்தமனம், வக்ரம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில்லை. 
நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.

No comments:

Post a Comment