அனைத்து ஜோதிட
அறிஞர்களே,
இன்று நம் கையில் தவழும் ஜோதிடக்கலை சுமார் ஐந்தாயிரம்
ஆண்டுகளாக நம் முன்னோர்கள் படிப்படியாக கண்டுப்பிடித்த ஒரு அறிய பொக்கிஷம் ஆகும்.
இன்றும் அறிவியலுக்கு எட்டாத பல ரசியங்களை நமது முன்னோர்கள் தவம் இருந்து
கண்டுப்பிடித்த கலை ஆகும். நாம் புத்தகம் மூலமாகவோ அல்லது நேரடி குரு மூலமாகவோ
இந்த ஜோதிட கலையை ஓர் அளவு தெரிந்து கொண்டுள்ளோம். சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாக
ஆய்வு செய்து கண்டுபிடித்த ஜோதிட அறிஞர்களுக்கும், பல முறைகளில் பதிவு செய்து வந்த
ஜோதிட ஆர்வலர்களுக்கும், நமக்கு ஜோதிடம் கத்துக் கொடுத்த குருவுக்கும் நன்றி சொல்லும்
நாள் என இந்த தேதியை (March – 21 ) தேர்வுசெய்வோம். வட நாட்டினர், மற்றும்
மேற்கத்திய நாட்டு ஜோதிடர்களும் இந்த நாளின் முக்கியத்தும் நன்கு தெரியும்.
இன்று இந்த கருத்தை அனைவரும் பகிர்ந்து கொள்வோம், அடுத்த
ஆண்டு இந்த நாள் உலக ஜோதிடர்கள் தினமாக மாறிவிடும்.
Please Share it !
No comments:
Post a Comment