Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

12 Mar 2014

வினாடி - 24



வினாடி – 24
எட்டாம் பாவகம் செயல்படும் பொழுது வீடு கட்டலாமா ?
பொதுவாக பாரம்பரிய முறையில் எட்டாம் பாவகம் செயல்படும் பொழுது எந்த செயலும் செய்ய கூடாது, ஆயுளுக்கு கண்டம், பேராபத்து, பெருநஷ்டம் என பலன்கள் கூறி வருகிறார்கள். இந்த ஜாதகமும் அவ்வாறு மற்றவர்களால் பலன் கூறப்பட்டதுதான்.
ராகு தசா செவ்வாய் புத்தியில், அதாவது 2007 ம் ஆண்டு கொடைக்கானலில் நிலம் வாங்கினார். செவ்வாய் நின்ற பாவகம் 4 ஆகும். செவ்வாய் புத்தியில் வீடு கட்டும் அளவு கையில் பணம் இல்லை. அடுத்து குரு தசா, சுய புத்தி நம் பாரம்பரிய ஜோதிடர்கள் ராசி கட்டத்தை வைத்துகொண்டு, குரு 1 மற்றும் 4 ம் அதிபதி, 2 ல் நீச்சமாக உள்ளார் எனவே புது வீடு கட்ட முடியாது, பழைய வீடு தான் அமையும் என கூறிவந்தார்கள்.

நமது TALI METHOD ன் படி கோள்களுக்கு உச்ச நீச்ச பலன் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, கொள்ள நின்ற பாவகமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது முறைப்படி குரு நின்ற பாவகம் 3 ஆகும். 3 ம் பாவகம் செயல்படும் போது நான்காம் பாவக செயலான வீடு கட்டுவது முடியாது, குரு திசையில் அடுத்த புத்தி சனி ஆகும், சனி நின்ற பாவகம் 7.  7 ம் பாவம் என்பது 4 ம் பாவத்தை 70 சதவீதம் கட்டுபடுத்தும், அதனால் சனி புத்தியிலும் வீடு கட்ட முடியாது. அடுத்து புதன், புதன் நின்ற பாவகம் 8 ஆகும். எட்டாம் பாவகம் நான்காம் பாவகத்தை 100 சதவீதம் செயல்படுத்தும். எனவே வரும் புதன் புத்தியில் வீடு கட்டலாம் என 2010 ம் ஆண்டு பலன் கூறப்பட்டது.
அதேபோல் இந்த ஜாதகர் 2012  டிசம்பர் மாதம் புதிய வீடு கட்டும் பணியை ஆரம்பித்து, மிக அருமையான பங்களா கட்டி 06.12.2013 அன்று கிரக பிரவேசமும் செய்துவிட்டார்.
இந்த ஜாதகரை பற்றிய மேலும் சில தகவல்கள், ராகு தசா சந்திர புத்தியில் சுய தொழில் தொடங்கினாலும், ராகு திசையில் பெரிய பண புழக்கம் இல்லை, ராகு நின்ற பாவகம் 1 ஆகும். அனால் குரு திசையில் அசுர வளர்ச்சி. நமது முறைப்படி குரு நின்ற பாவகம் 3 ஆகும்.  ஜாதகர் தற்சமயம் நைஜீரியா வில் இருக்கிறார். Import and Export  சுய தொழில், நல்ல வருமானம், சந்தோஷமாக இருக்கிறார்.    
           நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்   

No comments:

Post a Comment