பரிகாரம் பகுதி – 2
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
ஜோதிடத்தை தொழிலாக செய்தால் குடும்பம் விளங்காது, ஜோதிடரின்
குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற கூற்று உண்மையா? உண்மைதான். அநேக ஜோதிடர்களும்,
அவரது குடும்பத்தினரும் பாதிகப்படுகிறர்கள். ஏன்? எப்படி?
முதல் காரணம், மனிதனுடைய மூளையில் நடந்து முடிந்த பதிவுகள் (Past) மட்டுமே இருக்கும், நடக்க இருப்பது (Future) பிரம்ம ரகசியமாகவே
இருக்கும். அனால் ஆதி முதல் மனித குலம், நடக்க இருப்பதை முன்கூட்டியே எப்படியாவது தெரிந்து
கொள்ளவேண்டும் என பல முயற்சிகள் செய்த
வண்ணம் இருக்கிறார்கள், அதில் ஒன்றுதான் ஜோதிடம். நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து
கொண்டால் தன்னை தற்காத்து கொள்ளலாமே என்கிற நப்பாசைதான்.
சுமார் 5000 ஆண்டு காலமாக வானவியல் அறிஞர்கள், வானில் உள்ள
கோள்களுக்கும் மனிதனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
கோள்களுக்கும் மனிதனுடைய செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, இதனை நமது முன்னோர்கள் முதல் இன்று வரை உள்ள வானவியல் ஜோதிடர்கள் நிருபித்து
இருகிறார்கள். வானில் உள்ள கோள்களுக்கும் மனிதனுடைய மூளைக்கும் எதோ தொடர்பு
இருக்கத்தான் செய்கிறது. ஒரேடியாக தொடர்பு இல்லை என மறுக்கவும் முடியாது. அசுர
வேகத்தில் அறிவியல் வளர்ந்து விட்டபோதிலும், ஜோதிட கலை அழிந்து விடவில்லை, மாறாக
ஜோதிடம் இன்றும் வளர்ந்து வரும் ஒரு கலையாக உள்ளது. ஜோதிடம் பொய்யாக இருந்தால்
இந்நேரம் எத்தனையோ கலைகள் அழிந்து விட்டது போல் ஜோதிடமும் அழிந்து இருக்கும். இன்றளவும்
உலகில் பல கோடி மக்கள் ஜோதிடத்தை மிகவும் நம்புகின்றனர்.
மனித குலத்திற்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவிப்பவனே
ஜோதிடன் ஆவான். நடக்க இருப்பதை முன்கூட்டியே கூறுவது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும்.
ரகசியமாகவே இருக்க வேண்டிய விஷயங்களை, வெளிபடுத்துவது ஒரு குற்றம், அதற்கு
பரிகாரம் சொல்லுவது அடுத்த குற்றம் ஆகும். எப்படி என்றால் கோள்கள்
அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து வருகிறது. அதை செய்ய விடாமல் தடுப்பது
ஒரு குற்றம்தானே.
உலகை படைத்த கடவுள் மனிதனுடைய பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை,
இறப்பு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை கோள்களிடம் ஒப்படைத்து உள்ளார் என
கூறலாம். அந்த கோள்களின் செயல்பாடுகளை பரிகாரத்தின் மூலம் தடுப்பதினால், அந்த
கோள்களின் கோபம் ஜோதிடன் மேல் கண்டிப்பாக திரும்பும். அதனாலேயே ஜோதிடன் பாதிக்க
படுகிறான். இந்த விஷயம் அநேக ஜோதிடர்களுக்கும் தெரியும். தெரிந்தும் ஏன்
செய்கிறார்கள் என்றால் புகழுக்கு மயங்குவதால்தான். பொதுவாக ஜோதிடகள் தான் கூறும்
ஒருசில பலன்கள் நடந்து விடுகின்ற பொழுது ஒருவித போதையில் சிக்கி கொள்கிறார்கள்,
அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாது.
பரிகாரம் தொடரும் !
நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்
No comments:
Post a Comment