Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

15 Mar 2014

வினாடி - 26



வினாடி – 26
கேள்வி : அரசு வேலை கிடைக்குமா ?
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
இந்த ஜாதகருக்கு நடப்பு ராகு திசையில் சுக்ர புத்தி 18.02.2016 வரை. ராகு நின்ற பாவகம் 7 ஆகும், 7 ம் பாவகம் என்பது 6 மற்றும் 10 ம் பாவங்களுக்கு 8,12 ம் பாவகமாக வரவில்லை. எனவே ராகு தசா வேலைக்கு செல்ல தடையை தராது. அனால் நடக்கும் புத்தி சுக்ரன் ஆகும். சுக்ரன் நின்ற பாவகம் 1. ஒன்றாம் பாவகம் என்பது 6 ம் பாவகத்திற்கு 8 ம் பாவகமாகவும், 10 ம் பாவகதிற்கு 4 ம் பாவகமாகவும்,  2 ம் பாவகதிற்கு 12 ம் பாவகமாகவும் வருகிறது. எனவே சுக்ர புத்தியில் வேலை கிடைக்க, போட்டி தேர்வில் வெற்றி பெற, அதிக முயற்சி எடுக்க மாட்டார், அதனால் சுக்ர புத்தி முடியும் வரை வாய்ப்பு இல்லை.
அடுத்து சூரிய புத்தி வரும். சூரியன் நின்ற பாவகம் இரண்டு. இரண்டாம் பாவகம் என்பது உத்தியோகத்திற்கு சிறப்பான பாவகம் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.  எனவே இந்த ஜாதகருக்கு ராகு திசை சூரிய புத்தியில் போட்டி தேர்வில் வெற்றி, பணி மூப்பு அடிப்படையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என பலன் கூறப்பட்டது.
ஜாதகரை பற்றிய விபரம் : 2005 முதல் அரசு மேல் நிலை பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். 13.04.2004 முதல் 07.09.2006 வரை குரு புத்தி, குரு நின்ற பாவகம் 10 கவனிக்கவும். திசையை நடத்தும் கோள் ராகு 7 ம் பாவகதில் உள்ளதால் கணவனுடன் நல்ல சந்தோஷமாக இருக்கிறார். இந்த ஜாதகருக்கு 01.08.2019 க்கு மேல் குரு திசை வரும், குரு நின்ற பாவகம் 10 ஆகும். எனவே குரு திசை முழுவதும் ஆசிரியர் பணியில் பிஸி ஆக இருப்பார், பல பொறுப்புகளும் கிடைக்கும்.
TALI METHOD ல் பலன் கூறுவது மிகவும் சுலபம் ஆகும்.
                              நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்

No comments:

Post a Comment