Contact

Contact: K.S.SUNDARA RAJAN : (+91 ) 98949 20196

28 Feb 2014

வினாடி 19



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் தோஷமா?

முதலில் 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்திற்கும் உறுதியாக தோஷம் கிடையாது. சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை ஒரு கோள் என்று நமது முன்னோர்கள் எடுத்துக் கொண்டதால் நாமும் அதையே பின்பற்றுகிறோம். சூரியனை ஒன்பது கோள்கள் சுற்றி வருகிறது, பூமியில் இருந்து பார்த்தால், ஒன்பது கோள்களும் பூமியை சுற்றி வருகிறது போன்ற தோற்றத்தை அளிக்கும். ஒன்பது கோள்ளுக்கும் வெளியே பால் வீதி உள்ளது. இந்த பால் வீதியில் மற்றும் அதற்கு வெளியேயும் ஆயிரகணக்கான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் செல்லும் பாதையில் உள்ள நட்சத்திரங்களை மட்டுமே  நாம் ஜோதிடத்தில் எடுத்துக்கொள்கிறோம். 360 பாகையில் உள்ள நட்சத்திரங்களை, ஒரு நட்சதிரத்திற்கு  பாகை 13.20 விநாடி என தோராயமாக நிர்ணயம் செய்துவிட்டனர்.
இந்த 27 நட்சத்திரத்தில் ஒன்பது கோள்களும் பயணிக்கும். அதாவது பூமியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு கோளுக்கு பின்னால் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அதையே கோள் நின்ற நட்சத்திரம் (பாதாசாரம்) என ஜாதகத்தில் குறிக்கப்படும். இந்த  நட்சத்திரங்களுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரை 27 பெயர்கள் உள்ளன, அதில் மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகமும் அடங்கும். இதில் இருந்து என்ன புரிந்து கொள்ளவேன்டும் என்றால் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரத்தில் பயணிக்கும். இந்திய ஜோதிடத்தில் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என எடுத்துக்கொள்கிறோம், சந்திரன் இருக்கும் ராசியை ஜென்ம ராசி என எடுத்துக்கொள்கிறோம்.
சந்திரன் மனோகாரகன், உடல்காரகன் ஆகும். ஒரு ஜாதகரின் எண்ணம், சிந்தனை, கனவுகள் எப்படி இருக்கும் என்று பலன் கூற மட்டும்தான் சந்திரன் நின்ற நட்சத்திரம், இராசி பார்க்க படுகிறது. அதேபோல் கோச்சார பலன் பார்க்கவும் ஜென்ம இராசி எடுத்துக்கொள்ளபடுகிறது. ஜோதிட வரலாற்றில் எந்த புத்தகத்திலும் சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்கும் மாமனார், மாமியார், கொழுந்தன், மைத்துனன் ஆகியோருக்கு தொடர்பு ஏற்படுத்தி பலன் கூறப்படவில்லை. அதேபோல் ஒரு ஜாதகத்தை கொண்டு அந்த ஜாதகரை தவிர மற்ற எவருக்கும் பலன் கூற முடியாது, சரியாகவும் வராது. எனவே ஒன்பது கோள்களும் மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் செல்லும். சந்திரனை நிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனார், மாமியார், கொழுந்தன், மைத்துனன் ஆகியோருக்கு ஆகாது என்ற எண்ணத்தில் இருந்து மீண்டுவருவோம்.
எதோ ஒரு குடும்பத்தில் ஒரு மருமகள் வந்த நேரம் மாமனாரோ, மாமியாரோ அவர்களுடைய சொந்த ஜாதகத்தில் ஆயுள் முடிந்து இறந்து பொய் இருக்கலாம், அதற்காக அந்த மருமகள் வந்த நேரம்தான் என்று நாம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு விதியை உருவாக்கிய காரணத்தால் இன்று ஜோதிடம் குப்பையாக உள்ளது. பொதுவிதிகளை முறைபடுத்தி பலன் கூறினால் ஜோதிட கலை வளரும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் விதிவிலக்கு, புதியவிதி என்று ஏற்படுத்தி கொண்டே போனால் ஜோதிடம், ஜோதிடர்களுக்கே புரியாத புதிராக மாறிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆயிரம், லட்சம், கோடி பெண்கள் - மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்து, திருமணமாகி  20, 30 ஆண்டுகள் வரை மாமனார் , மாமியார் உயுருடன் இருந்து இருக்கிறார்கள், இன்னும் இருந்தும் வருகிறார்கள். சமீப காலமாக 90 சதவீத ஜோதிடர்கள் இந்த நட்சத்திரங்கள் பாதிக்காது என்று உறுதி அளித்தாலும், பொது மக்களிடம் தான் பயம் உள்ளது. இந்த பயத்தை போக்க வேண்டியது ஜோதிடர்களின் கடமை ஆகும். எனவே எந்த நட்சத்திரதிற்கும் தோஷம் இல்லை என கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி !
                அன்புடன் K.S. சுந்தர ராஜன்

27 Feb 2014

இன்று ஒரு தகவல் ......

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ,
           எனக்கு நேரம் கிடைக்கும் பொது, வினாடி -கட்டுரைகள் கண்டிப்பாக எழுதுகிறேன். தினம் தோறும் எதிர் பார்காதீர்கள்.
                                       நன்றி ! அன்புடன் K.S.சுந்தர ராஜன்

25 Feb 2014

வினாடி 18



வினாடி 18
பெண்ணின் சரியான திருமண காலம்

நமது வாழ்வியலின் தன்மைக்கு தகுந்தவாறு பெண்களுக்கு 15 வயது முதல்  35 வயது வரை திருமணம் செய்து வருகின்றோம். ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் திருமணத்திற்கு தயாராகி விடுகிறாள். இருபின்னும் நமது அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின்படி பெண்களின் திருமண வயது 18 ஆகும். பெண்களுக்கு சரியான திருமண வயது என்ன என்பதில் குழப்பம் நிலவுகிறது என்பதினை அறிய முடிகிறது.
நாம் கம்ப்யூட்டர் உலகத்திற்குள் வந்த பின்பு, நீதிமன்றத்தில்  விவாகரத்து வழக்குகள் அதிகரித்து கொண்டே போகிறது. சில நீதிபதிகளே இந்த கேள்விகளுக்கு விடை தேடி பல்கலைகழகத்தில் ஜோதிடம் படித்து வருகிறார்கள். விவாகரத்துக்கு ஜோதிடம், ஜாதகம் மட்டுமே காரணம் அல்ல. ஏன் என்றால் தோஷம் எதுவும் இல்லாத, நல்ல தசா புத்தி நடக்கும் தம்பதியினரும் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
என் அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை பதிவு செய்கிறேன், தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு மேசுரிட்டி (Maturity) அதிகம். அதேபோல் பருவ வயதில் உடல் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். உதாரணமாக ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணையும், அதே பத்தாம் வகுப்பு ஆணையும் பாருங்கள் பெண்ணின் செயலிலும் தோற்றத்திலும் மேசுரிட்டி இருக்கும். அனால் ஒரு ஆண், சின்ன பையனாக விளையாட்டு தனமாக இருப்பான். இன்று மாநில அளவில் பெண்களே 10 th ,12 th  ல் முதல் மதிப்பெண் வாங்கி வருவதற்கும் இதுவும் ஒரு காரணம். நமது தமிழ் கலாச்சாரப்படி மணமகனை விட மணமகள் வயது குறைந்தே இருக்கும், இதற்கும் பெண்களின் மசுரிட்டியே காரணம் ஆகும்.
சரி பெண்களின் திருமண வயதுக்கும், பெண்களின் மசுரிட்டிக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம். ஒரு பெண், தனது பிறந்த வீட்டின் கலாச்சாரத்தை 15 வயது முதல் 18 வயதுக்குள் நல்ல புரிந்து கொள்கிறாள். பெண்களுக்கு இந்த வயது மிக முக்கியம் ஆகும். அறிவாற்றல் அபாரமாக இருக்கும், செயலின் வேகம், சுறுசுறுப்பு அதிகமாக காணப்படும். கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வயதில் கருவுற்றால் 99 சதவீதம் சுக பிரசவம்தான் நடக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த வயதில்தான் கருப்பான பெண் கூட மிக அழகாக இருப்பாள். இதையெல்லாம் வைத்துத்தான் நம் முதியோர்கள் பெண்களுக்கு 20 வயதுக்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள்.
அனால் இன்று பெண்களுக்கு படித்து பட்டம் வாங்க வேண்டும், அதன் பின் வேலை பார்க்க வேண்டும், அதன் பின்தான் திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும். பெண்கள் படிப்பது அல்லது வேலைக்கு போவது தவறு என்று சொல்ல வில்லை, அனால் இதெல்லாம் நடந்த பின் பெண்ணின் வயதை பாருங்கள் 25 க்கு மேல் ஆகிஇருக்கும். 25 வயது முதல் 30 வயது வரை பிறந்த வீட்டில் இருந்தால், பிறந்த வீட்டின் கலாச்சாரம் மட்டுமே ஒரு பெண்ணின் மண்டையில் நிற்கும். புதிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருக்காது. அதனால்தான் புகுந்த வீட்டு பழக்கவழக்கங்களை ஒரு பெண்ணால் ஏற்றுகொள்ள முடிவதில்லை. பெண்களால் பிறந்த வீட்டு கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் இன்றைய பிரச்சனையே. மாமியார், தனது வீட்டு பழக்கவழக்கங்களை மருமகளிடம் எவ்வளவு திணித்தாலும் மருமகளுக்கு வராது.
உதாரணத்துக்கு ஒரு செடியை இடம் மாற்றி நட்டால், புதிய மண்ணின் தன்மைக்கு தகுந்த மாதரி அது வேர் ஊன்டி வளர்ந்து கொள்ளும். அனால் மரத்தை இடம் மாற்றி நட்டால் மரம் பட்டுத்தான் போகும். அதேபோல் ஒரு குறிபிட்ட வயதுக்கு மேல், வளையும் தன்மையும் குறைந்து விடும். இதை மனதில் வைத்து உங்கள் வீட்டு பெண்களுக்கு நமது அரசாங்க சட்டம் சொல்லும் 18 வயதுக்கு மேல், அதிக பட்சம் 23 வயதுக்குள் திருமணம் செய்து வையுங்கள். இறைவனால் மனிதனுக்கு அழிக்கப்பட்ட வரப்ரசாதம் தாம்பத்திய சுகம். இந்த சுகத்தையும் அனுபவிக்க விடாமல் காலம் தள்ளாதீர்கள். 20 வயது முதல் 40 வயது வரை தாம்பத்திய சுகம் அனுபவிப்பதற்கும்,  35 வயது முதல் 40 வயது வரை தாம்பத்திய சுகம் அனுபவிப்பதற்கும்  உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்கையை வீணாக்காதீர்கள். நமது முனோர்கள் கூறிய பாதையில் இருந்து விலகி வர வர நமது கலாச்சாரமும் சீர் கெட்டுபோகும் என்பதில் ஐயமில்லை.
இந்த கருத்தை ஆமோதிப்பவர்களும், மறுப்பவர்களும் தயவு செய்து Comments  செய்யவும்.
             நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன் .
   

21 Feb 2014

வினாடி 17

அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்று TALI - Method படி ஒரு ஜோடியின் ஜாதகத்தை பாப்போம் ........


இந்த ஜோடியின் ஜாதகங்களை என் கையில் கொடுத்து விட்டு,
 குழந்தை எப்போது என்று கேட்டார்கள் ?
திருமண தேதி எப்போது என்று கேட்டேன். 25.08.2013 என்று கூறினார்கள்.
பெண் ஜாதகத்தில் ராகு திசை கேது புத்தி 5.07.2013 முதல் 24.07.2014 வரை. திசையை நடத்தும் ராகு நின்ற பாவகம் 6 ஆகும். புத்தியை நடத்தும் கேது நின்ற பாவகம் 12 ஆகும். ஆக பெண் ஜாதகப்படி திசையை நடத்தும் கோள் மற்றும் புத்தியை நடத்தும் கோள் இரண்டும் இரட்டை படை ஆகும்.

ஆண் ஜாதகத்தில் குரு திசை சனி புத்தி 22.01.2013 முதல் 06.08.2015 வரை. திசையை நடத்தும் கோள் குரு நின்ற பாவகம் 2 ஆகும். புத்தியை நடத்தும் சனி நின்ற பாவகம் 8 ஆகும். ஆக ஆண் ஜாதகப்படியும் திசையை நடத்தும் கோள் மற்றும் புத்தியை நடத்தும் கோள் இரண்டும் இரட்டை படை ஆகும்.

இந்த இரண்டு ஜாதகத்தையும் பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வந்து விடலாம், என்னவென்றால் ஆண், பெண் இருவருக்குமே ஒற்றைப்படை புத்தி வரவில்லை. எனவே திருமணம் ஆனாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது, அன்யோன்யம் கிடைக்காது. இதைத்தான் நம் முன்னோர்கள் ஒற்றைப்படையில் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர், அனால் நாம் தவறாக ஒற்றைப்படை வயது என புரிந்துகொண்டு உள்ளோம்.
இந்த ஜாதகத்தை அலசிய பின்பு ஒருவரையொருவர் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவும் இல்லை, தாம்பத்தியமும் சரியாக நடக்கவில்லை, இந்நிலையில் நீங்கள் குழந்தையை பற்றி கேள்வி கேட்கிறீர்களே என்று கேட்டேன். அதன் பின்புதான் இந்த பெண்ணின் பெற்றோர் குழந்தை பெறுவதில் சில சிக்கல் உள்ளது, பிறந்த வீட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வா என இந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர் என்று பெண்ணின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.
பெண் ஜாதகத்தில் திசையை நடத்தும் கோள் ராகு ஆறில். புத்தியை நடத்தும் கோள் கேது பன்னிரெண்டில். இந்த அமைப்பு ஈகோ வைகுறிக்கும். பனிரெண்டம்மிடத்து கேது தாம்பத்தியத்தை தவிர்க்கும். எனவே பெண்ணின் ஜாதகத்தில் தான் தவறு உள்ளது. பெண்ணை நல்ல விசாரியுங்கள், ஏதோ பிரச்சனையுடன் தான் பெண் பிறந்த வீட்டிற்க்கு வந்துள்ளது என கூறி அனுப்பினேன். ஏன் என்றால் ஆண் ஜாதகத்தில் புத்தியை நடத்தும் சனி எட்டில் இருப்பதால் பிரிவினைக்கு ஆண் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. எட்டாம் இடம் என்பது தாம்பத்தியத்தை மனைவியிடம் கேட்டு பெறும் எண்ணம் இருக்காது, ஒருவித பயம், அல்லது அவமானம் என என்ன தோன்றுமே தவிர, தாம்பத்தியத்தை தவிர்காது.
ஆக இப்பிரச்சனை பெண் ஜாதகத்தில் கேது புத்தி முடியும் வரை தொடரும், அதாவது 24.07.2014 வரை. அதன் பின் பெண் ஜாதகத்தில் வரும் புத்திகள் அனைத்தும் சாதகமாக உள்ளது, கவனிக்கவும் சுக்ரன்(5) சூரியன்(5) சந்திரன் (7) செவ்வாய் (11) . இது நிரந்தர பிரிவாக வாய்ப்பு குறைவு, ஏன் என்றால் விரைவிலேயே சுக்ர புத்தி வருகிறது 5 ம் பாவகம் செயல்படும்போது தானாக கணவனை சென்று அடையும். எனவே இந்த பெண் வேலைக்கு போய்கொண்டே இருக்கட்டும் கேது புத்தி முடிந்தவுடன் கணவனுடன் இணையும் என்று நமது TALI METHOD ன் படி பலன் கூறி அனுப்பி வைத்துள்ளேன். இருவரும் மீண்டும் சேர்ந்தவுடன், தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
        நன்றி, அன்புடன் K.S. சுந்தர ராஜன்  

19 Feb 2014

வினாடி 16



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
இராசி / பாவகம் , இதில் எதை வைத்து பலன் கூறுவது?

பொதுவாக நாம் நம் ஜாதக நோட்டில் இராசி மற்றும் நவாம்சம் கட்டம் மட்டும் பார்த்திருப்போம். கிராமங்களில் கணிக்கப்படும் ஜாதகங்களில் நவாம்சம் கட்டம் கூட இருக்காது, இராசி கட்டம் மட்டுமே இருக்கும். இராசி கட்டம் என்றால் அனைவருக்கும் தெரியும், அனால் பாவகம் என்றால் என்ன என்று பல ஜோதிடர்களுக்கே தெரியாத நிலையில் இருக்கிறோம்.
     இராசி கட்டம், இது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வானவீதியை ஒரு புகைப்படம் எடுத்தால் என்ன இருக்குமோ, அதையே ஒரு கட்டத்தில் எழுதி வைப்பது தான் இராசி கட்டம். இதைத்தான் தலைவிதி என்று கூறுகிறோம். பிறந்த நேரத்தில் குறிக்கப்படும் இராசி கட்டம் நம் வாழ்நாள் முழுவதும் மாறாதது ஆகும். இது ஒரு பொதுவான அமைப்பு ஆகும். ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் லக்னத்தை தவிர அனைத்து கோள் நிலைகளும் ஒரே நிலையில்தான் இருக்கும் (அதாவது ஒரே பாகை கலை தான் வரும்) கண்டிப்பாக இதில் இருக்காது.
     பாவகம் என்றால் புரியும் வண்ணம் கூறவேண்டுமானால் ஊருக்கு ஊர் மாறவிடும், ஏன் என்றால் பாவகம் பூமத்திய ரேகையை பொருத்து அமையும். பாவக கணிதத்திலும் பல முறைகள் பின் பற்றபடுகிறது அவை பாவக ஆரம்ப முறை, பாவக மத்திம முறை ஆகும். இதில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதில் முரண்பாடுகளும் உண்டு. இதை விரிவாக பின்னர் அயனாம்சம் தலைப்பில் பார்க்கலாம்.
இராசியை கொண்டு என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம்.
1.       பன்னிரு இராசிகளில் கோள்கள் நின்ற பலன் ( உதாரணம் - மேஷ இராசியில் சூரியன் நின்ற பலன்)
2.       கோள்களின் பலம் ( அதாவது ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, சமம், பகை )
3.       பாவக அதிபதி
4.       பாவக அதிபதி மாறி நின்ற பலன் (உதாரணம் இரண்டுக்கு உடையவன் ஆறில் நின்ற பலன்)
5.       அரச யோக பலன்கள் .
6.       அனைத்து தோஷங்களும் இராசியை வைத்தே கூறப்படுகிறது.
7.       கோள்கள் இணைவு பலன்கள்.
8.       ஒரு குறிபிட்ட பாவக காரக கோளின் நிலை. ( உதாரணம் புத்ர காரகன் குரு வின் நிலை)
9.       ஜென்ம இராசியை எடுத்துக்கொண்டு, கோச்சார பலன் கூறுவதற்கு.
10.   திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு. (தோஷ சாம்யம் பார்க்க)
இன்னும் பல பார்த்து கொண்டு வருகிறோம்.....
ஜாதகம் பலன் கூறுவதில் விதி - மதி இரண்டுமே மிக முக்கியம். இவை இருகண்கள் போல. இராசியை வைத்து விதியை கூறலாம், பாவகத்தை வைத்துத்தான் மதியை கூறவேண்டும். அதாவது தசாபுத்தி பலன்கள் கூற பாவகத்தை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இராசி கட்டத்தில் 7 இல் உள்ள கோள், பாவக கட்டத்தில் 6 ம் பாவகம் அல்லது 8 ம் பாவகதிற்க்கு  மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பலன்கள் மொத்தமாக மாறிவிடும். 
எனவே இராசியை வைத்து எதற்கு பலன் கூற வேண்டும், பாவகத்தை கொண்டு எதற்கு பலன் கூறவேண்டும் என்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் கணணி வந்து விட்டதால் பாவக கணிதம் போட எந்த சிரமும் இல்லை என்று ஆகிவிட்டது, இனியாவது தசாபுத்தி பலன்களை பாவகத்தை கொண்டு கூறுவோம்.
           நன்றி ! அன்புடன் K.S. சுந்தர ராஜன்.