அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்று TALI - Method படி ஒரு ஜோடியின் ஜாதகத்தை பாப்போம் ........
இந்த ஜோடியின் ஜாதகங்களை என் கையில் கொடுத்து விட்டு,
குழந்தை எப்போது
என்று கேட்டார்கள் ?
திருமண தேதி எப்போது என்று கேட்டேன். 25.08.2013 என்று கூறினார்கள்.
பெண் ஜாதகத்தில் ராகு திசை கேது புத்தி 5.07.2013 முதல் 24.07.2014 வரை. திசையை நடத்தும் ராகு நின்ற பாவகம் 6
ஆகும். புத்தியை நடத்தும் கேது நின்ற பாவகம் 12 ஆகும். ஆக பெண் ஜாதகப்படி
திசையை நடத்தும் கோள் மற்றும் புத்தியை நடத்தும் கோள் இரண்டும் இரட்டை படை ஆகும்.
ஆண் ஜாதகத்தில் குரு திசை சனி புத்தி 22.01.2013 முதல் 06.08.2015 வரை. திசையை நடத்தும் கோள் குரு நின்ற பாவகம் 2
ஆகும். புத்தியை நடத்தும் சனி நின்ற பாவகம் 8 ஆகும். ஆக ஆண்
ஜாதகப்படியும் திசையை நடத்தும் கோள் மற்றும் புத்தியை நடத்தும் கோள் இரண்டும்
இரட்டை படை ஆகும்.
இந்த இரண்டு ஜாதகத்தையும் பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வந்து
விடலாம், என்னவென்றால் ஆண், பெண் இருவருக்குமே ஒற்றைப்படை புத்தி வரவில்லை. எனவே திருமணம்
ஆனாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது, அன்யோன்யம் கிடைக்காது. இதைத்தான்
நம் முன்னோர்கள் ஒற்றைப்படையில் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர், அனால்
நாம் தவறாக ஒற்றைப்படை வயது என புரிந்துகொண்டு உள்ளோம்.
இந்த ஜாதகத்தை அலசிய பின்பு ஒருவரையொருவர் இன்னும் சரியாக
புரிந்துகொள்ளவும் இல்லை, தாம்பத்தியமும் சரியாக நடக்கவில்லை, இந்நிலையில் நீங்கள்
குழந்தையை பற்றி கேள்வி கேட்கிறீர்களே என்று கேட்டேன். அதன் பின்புதான் இந்த பெண்ணின்
பெற்றோர் குழந்தை பெறுவதில் சில சிக்கல் உள்ளது, பிறந்த வீட்டில் சிகிச்சை
எடுத்துக்கொண்டு வா என இந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர் என்று பெண்ணின் பெற்றோர்
என்னிடம் தெரிவித்தனர்.
பெண் ஜாதகத்தில் திசையை நடத்தும் கோள் ராகு ஆறில். புத்தியை
நடத்தும் கோள் கேது பன்னிரெண்டில். இந்த அமைப்பு ஈகோ வைகுறிக்கும்.
பனிரெண்டம்மிடத்து கேது தாம்பத்தியத்தை தவிர்க்கும். எனவே பெண்ணின் ஜாதகத்தில்
தான் தவறு உள்ளது. பெண்ணை நல்ல விசாரியுங்கள், ஏதோ பிரச்சனையுடன் தான் பெண் பிறந்த
வீட்டிற்க்கு வந்துள்ளது என கூறி அனுப்பினேன். ஏன் என்றால் ஆண் ஜாதகத்தில்
புத்தியை நடத்தும் சனி எட்டில் இருப்பதால் பிரிவினைக்கு ஆண் காரணமாக இருக்க
வாய்ப்பு இல்லை. எட்டாம் இடம் என்பது தாம்பத்தியத்தை மனைவியிடம் கேட்டு பெறும்
எண்ணம் இருக்காது, ஒருவித பயம், அல்லது அவமானம் என என்ன தோன்றுமே தவிர,
தாம்பத்தியத்தை தவிர்காது.
ஆக இப்பிரச்சனை பெண் ஜாதகத்தில் கேது புத்தி முடியும் வரை
தொடரும், அதாவது 24.07.2014 வரை. அதன் பின் பெண் ஜாதகத்தில் வரும் புத்திகள்
அனைத்தும் சாதகமாக உள்ளது, கவனிக்கவும் சுக்ரன்(5) சூரியன்(5) சந்திரன் (7) செவ்வாய் (11) . இது நிரந்தர பிரிவாக வாய்ப்பு குறைவு, ஏன் என்றால் விரைவிலேயே சுக்ர புத்தி வருகிறது 5 ம் பாவகம் செயல்படும்போது தானாக கணவனை சென்று அடையும். எனவே இந்த பெண் வேலைக்கு போய்கொண்டே இருக்கட்டும் கேது புத்தி முடிந்தவுடன் கணவனுடன் இணையும் என்று நமது TALI
METHOD ன் படி பலன் கூறி அனுப்பி
வைத்துள்ளேன். இருவரும் மீண்டும் சேர்ந்தவுடன், தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
நன்றி, அன்புடன் K.S. சுந்தர ராஜன்
No comments:
Post a Comment