அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,காதலர் தின வாழ்த்துக்களுடன்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் ?என்று
அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் செவ்வாயின் காரகத்துவதை
சற்று அலசி பார்போம். இன்றைய காலத்தில் வாழும் ஜோதிட அறிஞர்கள் அவர்களின்
புத்தகத்தில் செவ்வாயை பற்றி என்ன கூறுகிறார்கள்.
1)
சுக்ரன் செக்ஸ் உணர்வையும், செவ்வாய் அதில் ஏற்படும் தணியாத தாகத்தையும், அதை
தணித்துக்கொள்ள எதையும் செய்யும் துணிவையும் தரும் கோள் ஆகும். 3 ம் அதிபதியும், செவ்வாயும் சம்பந்தப்பட்டு
இருந்தால், காம இச்சையை தணித்துக்கொள்ள எதையும் செய்யும் துணிவை தரும் – S. P. சுப்பிரமணியன்
2)
சுக்ரன் வீரியத்தன்மை தரும் கோள் ஆகும். செவ்வாய் மர்ம உறுப்புகளில்
வலிமையையும், வேகத்தையும் ஏற்பட வைக்கின்றன. வீரியதன்மையை வெளிப் படுத்த உதவுவதில்
செவ்வாய் பெரும் பங்கு வகுகிக்கின்றன. – Dr. K.P. வித்யாதரன்
3)
உணர்ச்சிகளின் வேகம் செயல்படும்போது, ஆசாபாசங்கள், அவை நிறைவேறாவிட்டால் கோபம்
, இச்சையை பூர்த்தி செய்து கொள்ளும் வெறி போன்ற பலன்களை செவ்வாய் ஏற்படுத்துகிறது –
S.வைத்தியநாதன்
4)
காமம் வேறு இச்சை வேறு, மிருகங்கள் பகல் பொழுதில் உடல் உறவு கொள்ளும், இது
காமம் ஆகும் – இது செவ்வாயின் வேலை. இல்லற
தர்மம் என்பது அவசியத்திற்கு உடலுறவு கொள்ளுதல், இது இச்சையாகும் – இது சுக்ரனின்
வேலை. – A. பிரஹஸ்பதி .
ஆக செவ்வாய்க்கும் காம ஈடுபாட்டிற்கும் நெருங்கிய
தொடர்பு உள்ளது என்று புலனாகிறது அல்லவா. அக்காலத்தில் வட மொழி பேசுவோர் மட்டுமே
ஜாதகம் பார்த்து வந்துள்ளனர். இவர்களிடம் பலன்பார்க்க வரும் சாதாரண மக்களிடம்
சரியாக முகம் கொடுத்து கூட பேசமாட்டார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில்
செவ்வாய்க்கும் காமத்திற்கும் உள்ள தொடர்பை எப்படி சாதாரண மக்களிடம் நேரடியாக
கூறமுடியும் ? அதனாலேயே மறைமுகமாக “செவ்வாய் தோஷம்” என்று கூறிவிட்டனர். ஆனால் இன்று அனைத்து
வர்க்கத்தினரும் ஜோதிடம் தொழிலாக பார்த்து வருகின்றனர். எனவே மக்களிடம் உண்மை
நிலையை எடுத்து கூற வேண்டிய கட்டாயத்தில் இருகிறோம்.
இதில் இருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்
என்றால் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய்
இருந்தால் காம ஈடுபாடு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதே உணர்வு
உடைய ஜோடியை இணைத்து வைத்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாட்டின் படி
அவர்களும் சந்தோஷமாக வாழமுடியும்.
லக்னத்திற்க்கு
2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் மட்டும்தான்
செவ்வாய் என எடுத்துக் கொள்ளவேண்டும். சந்திரனுக்கோ அல்லது சுக்க்ரனுகோ பார்க்க
கூடாது. செவ்வாய்க்கு செவ்வாயை சேர்த்தால் சந்தோஷம் கிடைக்கும். ஒருவருக்கு
இருந்து அவரின் ஜோடிக்கு இல்லை என்றால் கண்டிப்பாக உயிர் ஒன்றும் போய்விடாது,
தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது, அவ்வளவுதான். என்னதான் ஒருவனுக்கு ஒருத்தி
என்ற பண்பாடில் நாம் வாழ்ந்தாலும,
தாம்பத்தியத்தில் திருப்தி இல்லை என்ற வரும் பொழுது, ஜாதகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட தாம்பத்திய உறவு ஏற்படும் நிலை இருப்பின், இந்த திருப்தி இன்மை அடுத்த
துணையை நாட வைக்கும். இதனால்
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.
செவ்வாய் தோஷம் – தொடரும் .....
அன்புடன் - K.S. சுந்தர ராஜன்
Super sir.......
ReplyDeleteRavikumar
Pollachi
9092241010
Thank you for your article. You say that chevvai dosham should be seen only from lagna. Then, why is it given in "Paambu Panchangam" that chevvai dosham should be seen from sukran and moon also?
ReplyDeleteதிரு. கார்த்திக் நடராஜன் அவர்களே, செவ்வாய் சந்திரனுக்கும் சுக்ரனுக்கும் பார்க்க வேண்டும் என்கிற குழப்பம் இருப்பதை இந்த கட்டுரையில் நானே குறிப்பிட்டு உள்ளேன் கவனிக்கவும். ஒரு மனிதனின் செயல்பாடுகளை லக்னத்தின் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்ளமுடியும் .
ReplyDelete